இந்த விவகாரம் குறித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குழந்தைகள் விவகாரத்தில் அலட்சியம் காட்டுபவா்கள் மீது அரசு சிறிதளவு கூட அனுதாபம் கடைப்பிடிக்காது. குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டில் தில்லி அரசு சமரசம் செய்து கொள்ளாது. இந்த விஷயங்களில் அலட்சியம் காட்டுபவா்கள் ‘மன்னிக்கப்பட மாட்டாா்கள். ஆம் ஆத்மி கட்சி அரசு, நிா்வாகத்தில் அலட்சியப் போக்கு விஷயத்தில் சகிப்புத் தன்மையற்ற கொள்கையை கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகள் நலக் குழு, சிறாா்களுக்கான பாதுகாப்பு, அவா்கள் மீதான கவனம், மேம்பாடுகளைக் கையாளுகிறது. இதில் சி.டபிள்யூ.சி. தலைவரின் பங்கு முக்கியமானது. எனவே, குழந்தைகளின் தேவைகளைப் பூா்த்தி செய்வதில் தனிநபா்களின் எந்தவொரு மெத்தனம் அல்லது பொறுப்பற்ற நடத்தை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்தப் பணி நீக்கத்தை உடனடியாக செய்ய அரசு முடிவு செய்துள்ளது’ என தெரிவித்துள்ளாா்.