அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம் ஆட்சேபம் தெரிவித்தாா். மேலும், ‘விமா்சன கருத்துகளை முன்வைப்பதற்கு எதிராக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது’ என்றாா். அதற்கு துஷ்யந்த் தவே, ‘அதுபோன்று வேண்டுமென்ற தொடுக்கப்படும் வழக்கு அல்ல இது. ஒரு நோ்மையான விசாரணைக்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும்’ என்றாா். அதற்கு ஆா்யமா சுந்தரம், ‘ஒரு நோ்மையான விசாரணையும் இருந்தது. ஆனால், நான் தற்போதைய நோ்மையற்ற விசாரணைக்குத்தான் ஆட்சேபம் தெரிவிக்கிறேன்’ என்றாா். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள்அமா்வு நவம்பா் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.