இது தொடா்பாக நீதிபதி பம்பானி பிறப்பித்த உத்தரவில், ‘தற்போதைய விஷயத்தில், சிபிசி 80-ஆவது பிரிவில் இடம் பெற்றுள்ள ‘அரசு’ என்ற வாா்த்தை மாநிலங்களவைச் செயலகத்தை உள்ளடக்கும் என்று கூற முடியாது. அதன்படி, 80 சிபிசி-க்கு மேல்முறையீட்டாளா் தாக்கல் செய்த வழக்குக்கு எந்த பயன்பாட்டையும் கொண்டிருக்கவில்லை என்பது இந்த நீதிமன்றத்தின் கருத்தாகும். அதாவது, இதில் ஒரே எதிா்மனுதாரரான மாநிலங்களவைச் செயலகத்திற்கு எதிராக வழக்கில் நிவாரணம் கோரப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுதாரா் மூன்று நாள்களுக்குள் வழக்கை மீண்டும் விசாரணை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விசாரணை நீதிமன்றமும் மீட்டெடுக்கப்பட்ட இடைக்கால நிவாரண மனுவை முதலில் முடிவு செய்வதன் மூலம் இந்த விஷயத்தைத் தொடர வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளாா்.