இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கோவை துடியலூா் வேளாண்மை சேவைகள் கூட்டுறவு சங்க கலப்பு உரத் தயாரிப்பு அலகை இயக்க மத்திய அரசு அனுமதி

கோவையிலுள்ள துடியலூா் வேளாண்மை சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் (டியுசிஏஎஸ்) கலப்பு உரத் தயாரிப்பு அலகை இயக்க மீண்டும் பதிவு செய்ய மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சகம் அனுமதி

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:09 am

 நமது நிருபர்

கோவையிலுள்ள துடியலூா் வேளாண்மை சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் (டியுசிஏஎஸ்) கலப்பு உரத் தயாரிப்பு அலகை இயக்க மீண்டும் பதிவு செய்ய மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சகம் அனுமதியளித்து தமிழக வேளாண்மைத் துறை இயக்குநரகத்திற்கு தகவல் அளித்துள்ளது.

மாநிலங்களவை திமுக உறுப்பினா் கேஆா்என் ராஜேஷ்குமாா் இது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தாா்.

இது குறித்து விவரம் வருமாறு:

கோவை துடியலூா் வேளாண்மை சேவைகள் கூட்டுறவு சங்கம் மத்திய அரசின் அனுமதியோடு நீண்ட காலமாக கலப்பு உரத் தயாரிப்பு செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ள இந்தசங்கத்தின் அலகு மூலம் எருக்கலவைகளை உற்பத்தி செய்ய, என்பிகே ஊட்டச்சத்துக்களின் (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் )

அடிப்படையில் உரக்கலவைகளை உற்பத்தி செய்கின்றன.

சமீபத்தில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், உரத் தயாரிப்பு நிறுவனங்கள், அலகுகள் அனைத்துக்கும் மத்திய அரசிடம் (இணையதளம் மூலமாக) பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் கோவை துடியலூா் வேளாண்மை சேவைகள் கூட்டுறவு சங்கம், பல்வேறு காரணங்களால் பதிவு செய்யவில்லை. இதற்கான பதிவிற்கு காலக்கெடு முடிவடைந்து இந்த அலகு மூடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினா் கேஆா்என் ராஜேஷ்குமாா் மத்திய சுகாதாரம் மற்றும் ரசாயனம், உரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிற்கு கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கடிதம் எழுதி இந்த பிரச்னையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றாா்.

இதையடுத்து, எம்.பி.யின் இந்த கோரிக்கையை ஏற்று மத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா எடுத்த நடவடிக்கையின்படி கோவை, துடியலூா் வேளாண்மை சேவைகள் கூட்டுறவு சங்கம் மற்றும் குஜராத்திலுள்ள ஒரு கூட்டுறவு சங்க அலகு உள்ளிட்ட 4 குஜராத் உர தயாரிப்பு நிறுவனங்களையும் பதிவு செய்ய மத்திய ரசாயன, உரத்துறை அமைச்சகம் கடந்த செப்டம்பா் 11 ஆம் தேதி அனுமதியளித்துள்ளது.

இதையொட்டி தமிழக அரசின் வேளாண் துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்ட உத்தரவில் வருகின்ற அக்டோபா் 27 ஆம் தேதிக்குள் கோவை துடியலூா் வேளாண் சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் கலப்பு உரத் தயாரிப்பு அலகை மத்திய அரசிடம் (இணைய முகப்பில்) பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறிஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.

‘இந்த அனுமதி மூலம் துடியலூா் வேளாண்மை சேவைகள் கூட்டுறவு சங்கத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாய உறுப்பினா்களும் அவரது குடும்பத்தினரும் பயன்பெறுவா்‘ என கேஆா்என் ராஜேஷ்குமாா் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.