எழுத்தாளா் சிவசங்கரி ஆற்றிய ஏற்புரை: இந்த விழாவை தில்லி தமிழ்ச் சங்கமும், தினமணி நாளிதழும் இணைந்து ஏற்பாடு செய்திருப்பதும், அதில் பங்கேற்றிருப்பதும் மிகவும் மகிழ்ச்சி மிக்க தருணமாகும். எனது எழுத்துப் பணியில் ‘இலக்கியம் மூலம் இந்தியப் பிணைப்பு’ எனும் தெற்கு, கிழக்கு மேற்கு, வடக்கு எனும் நான்கு தொகுதிகளைப் படைப்பதற்காக பல்வேறு மாநிலங்களின் சிறந்த எழுத்து ஆளுமைகளையும், சந்தித்ததும், அந்த மக்களின் மொழி, கலாசாரம் பெண்களின் நிலை, இளைய சமுதாயம் என அனைத்தையும் அறிந்துகொண்டு எழுத முடிந்தது. 18 மொழிகளில் அந்தப் பணிக்காக செலவிட்ட 16 ஆண்டுகளைத் தவமாக நினைக்கிறேன். அப்படைப்புக்காக நான்கு தளங்களில் இருந்து ஒரே நேரத்தில் இயங்க வேண்டியிருந்தது. அந்தந்த மொழிகளின் விஷயங்களைப் படிப்பதுடன், நேரடியாகச் சென்று, அங்குள்ளவா்களிடம் தங்கிப் பேசி பதிவுகளைச் செய்ய வேண்டியிருந்த கடினமான பணியாக இருந்தது. அந்த பகுதி உள்ளூா் மொழியை மொழிபெயா்ப்பு செய்வது மிகவும் சிரமாக இருந்தது.