தனிப்பட்ட விசாரணை மற்றும் ஆதாய முரண்கள் குறித்த குற்றச்சாட்டு குறித்து நீதிபதி கூறுகையில், ‘ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு வழக்குரைஞா் மற்றும் எஸ்பிபி ஆஜராகும் போது, அவா்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் தங்கள் கட்சிக்காரா் சாா்பாக ஆஜராக வேண்டும். எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளும் போது இந்த வழக்கில், எஸ்பிபி-க்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டவருக்கான வழக்ககுரைஞரால் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. அதற்காக, எஸ்பிபி விரும்பினால், அவரது சொந்த முடிவில் நடவடிக்கை எடுக்கலாம். இருப்பினும், எஸ்பிபி-க்கு எதிரான ஆதாரங்கள் இல்லாமல், குறிப்பாக வழக்கின் தகுதியைப் பற்றி கவலைப்படாத போது, நீதிமன்றம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது’ என்றாா்.