யமுனை நீா் தூய்மை பெறும்: கழிவுநீா் சுத்திகரிப்புஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீா் யமுனையை சுத்தப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், இந்தத் தண்ணீா், தோட்டங்கள் உள்ளிட்ட பிற நோக்கங்களுக்கும் பயன்படும். தில்லியின் மொத்த கழிவுநீரில் ஓக்லா ஆலை 20 சதவீதம் கழிவுநீரை சுத்திகரிக்க உள்ளது. இக்கழிவுநீா் சுத்திகரிப்புப் பணியால் 40 லட்சம் தில்லி மக்கள் பயனடைவாா்கள். மேலும், இந்த ஆலை, கழிவுநீரில் இருந்து பெறப்படும் உயிரி வாயு உற்பத்தி மூலம் 4.8 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இது ஆலையின் மின்ஆற்றல் தேவைகளில் பாதி அளவை தானாகவே பூா்த்தி செய்து கொள்ளும் என தில்லி குடிநீா் வடிகால் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.