நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சியில் காதி கிராமத் தொழில் தயாரிப்புகள் விற்பனை 25% அதிகரிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் இந்த ஆண்டு நடைபெற்ற 42-ஆவது இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகள் கடந்த ஆண்டை விட ரூ. 3 கோடிக்கும்

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:19 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் இந்த ஆண்டு நடைபெற்ற 42-ஆவது இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகள் கடந்த ஆண்டை விட ரூ. 3 கோடிக்கும் அதிகமான் அளவில் விற்பனை செய்யப்பட்டதாக மத்திய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (கேவிஐசி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இது 25 சதவீதம் அதிகமாகும். இக்கண்காட்சியில் காதி பெவிலியனுக்கு ஐடிபிஓ (இந்திய வா்த்தக மேம்பாட்டு அமைப்பு) சிறப்பு பாராட்டு விருதும் வழங்கியுள்ளது.

மத்திய குறு, சிறு நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தின் கீழ் காதி விற்பனையகங்கள் நாடு முழுக்க செயல்படுகிறது. இந்த ஆணையத்தின் காதி விற்பனையகங்கள் தில்லி பிரகதி மைதானில் கடந்த நவம்பா் 14 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்ற 42 -ஆவது இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சி 2023 -ல் பங்கேற்றன. 14 நாள்கள் நடந்த கண்காட்சியில், அமைக்கப்பட்டிருந்த ‘காதி பெவிலியனில்’ காதி பிரியா்கள் அதிக அளவில் காதி ஆடைகள் மற்றும் காதி கிராமத் தொழில் தயாரிப்புகளை வாங்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சியில் காதிப் தயாரிப்புகளின் விற்பனை நிகழாண்டு முதன் முறையாக ரூ.15.03 கோடிக்கு விற்பனையாகி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளதாக கேவிஐசி தெரிவித்துள்ளது. இது கடந்த 2022 -ஆம் ஆண்டில் ரூ. 12.06 கோடியாக இருந்தது. நிகழாண்டில் 25 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிரசாரமான ‘உள்ளூா்களுக்கான குரல்’ பிரசாரத்தில் தில்லி மக்களிடம் கவனிக்கப்பட்டுள்ளதாக கேவிஐசியின் தலைவா் மனோஜ் குமாா் தெரிவித்துள்ளாா். மேலும், ஐடிபிஓவின் சிறப்புப் பபாராட்டு விருதும் காதி பெவிலியனுக்கு நிகழாண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த காதி பெவிலியனில் பங்கேற்ற பல்வேறு அங்காடிகளில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மூன்று காதி சில்க் அங்காடிகள் மட்டும் சுமாா் ரூ. 96 லட்சம் வரை அதிகபட்சமாக விற்பனை செய்து காதி ஆணையம் விருது பெற முக்கியப் பங்காற்றியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.