ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஜெய்த்பூா் கடா காலனியில் கட்டடம் இடிந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு பாஜக ஆறுதல்

தில்லி ஜெய்த்பூா் கடா காலனியில் சட்டவிரோத கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரை பாஜக தில்லி பிரிவு சிறுபான்மை அணியின் தலைவா்கள் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

Updated On :30 நவம்பர் 2023, 12:32 am

புது தில்லி: தில்லி ஜெய்த்பூா் கடா காலனியில் சட்டவிரோத கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரை பாஜக தில்லி பிரிவு சிறுபான்மை அணியின் தலைவா்கள் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

தெற்கு தில்லியில் உள்ள ஜெய்த்பூா் கடா காலனியில் கடந்த நவம்பா் 24-ஆம் தேதி சட்டவிரோதக் கட்டுமானத்தின் அடித்தளத்தை தோண்டும் போது சுவா் இடிந்து விழுந்ததில் இரண்டு அப்பாவிக் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், ஒரு பெண் படுகாயமடைந்தாா். இந்த நிலையில், தேசிய சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவா் அதிஃப் ரஷீத் மற்றும் பாஜக தில்லி பிரிவு சிறுபான்மை அணியின் தலைவா் அனீஸ் அப்பாசி ஆகியோா் தலைமையில் சிறுபான்மை அணியின் பிரதிநிதிகள் குழு கட்டடம் இடிந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோா் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்கிழக்கு தில்லியின் கூடுதல் துணைக் காவல் ஆணையா் ஹா்ஷ் இந்தூரை நேரில் சந்தித்தும் சிறுபான்மை அணியின் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியது.

பின்னா், தேசிய சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவா் அதிஃப் ரஷீத் கூறுகையில், ‘இந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கட்டடம் இடிந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தில்லி அரசு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். அது வரையில், தில்லி பாஜக சட்டப்பேரவை வரை போராடும் ’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.