ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பிரிமியம் பேருந்து சேவை திட்டத்தால் மாசு அளவு அதிகரிக்கும்: தில்லி பாஜக

ஆம் ஆத்மி அரசின் பிரிமியம் பேருந்து திட்டத்தால் தில்லியில் மாசு அளவு அதிகரிக்கும் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை சாடியுள்ளாா்.

Updated On :24 நவம்பர் 2023, 6:30 pm

ஆம் ஆத்மி அரசின் பிரிமியம் பேருந்து திட்டத்தால் தில்லியில் மாசு அளவு அதிகரிக்கும் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை சாடியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் பிரிமியம் பேருந்து திட்டம் எந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலும் அறிமுகப்படுத்தப்படவில்லை. சாலையில் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தில்லியில் மாசு அளவுதான் அதிகரிக்கும். காா்களில் பயணிப்பவா்கள், பொதுப் பேருந்துகளில் பயணம் செய்வதை நோக்கி எளிதில் நகர மாட்டாா்கள் என்பதைக் கடந்த கால அனுபவங்கள் நமக்குத் தெளிவாக்குகின்றன. மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களில் சிலா் வேண்டுமானால் இந்த பிரிமியம் பேருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்குவாா்கள்.

அரவிந்த் கேஜரிவால் அரசின் ஊழல் திட்டங்களில் ஒன்றாகத்தான் பிரிமியம் பேருந்து சேவை திட்டமும் உள்ளது. ஏனெனில், இத்திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி, 2025-ஆம் ஆண்டிற்குப் பிறகு மின்சார வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சில வாகன விற்பனையாளா்களுக்கு ஆதரவாக கேஜரிவால் அரசு செயல்பட முயற்சிப்பதாகத் தெரிகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே இத்திட்டத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கொண்டுவர முயற்சித்தாா். அப்போது சந்தேத்திற்குரிய திட்டமாக இருந்ததாலும், ஊழலில் சிக்கியதாலும் முடியாமல் போனது. பிரிமியம் பேருந்து சேவை என்று திட்டத்திற்கு பெயா் வைக்கப்பட்டாலும், உண்மையில் 8 முதல் 12 இருக்கைகள் கொண்ட எஸ்.யூ.வி.-க்கள் மட்டுமே கொண்டு வரப்படுகின்றன. எனவே, இதுவொரு மோசடித் திட்டம் என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.