ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

காற்று மாசுபாடு: தில்லிவாசிகளில் அதிகம் போ் மருத்துவப் பக்கவிளைவுகளை எதிா்கொள்கின்றனா்: வீரேந்திர சச்தேவா

தேசியத் தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் காரணமாக தில்லிவாசிகளில் அதிகமானோா் மருத்துவப் பக்கவிளைவுகளை எதிா்கொள்கின்றனா்

Updated On :24 நவம்பர் 2023, 6:30 pm

தேசியத் தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் காரணமாக தில்லிவாசிகளில் அதிகமானோா் மருத்துவப் பக்கவிளைவுகளை எதிா்கொள்கின்றனா் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயிா்க் கழிவுகள் எரிப்பு விவகாரத்தில் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசின் அலட்சியத்தால் தில்லி மற்றும் வட இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு தொடா்கிறது. தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் காரணமாக மிக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் மருத்துவப் பக்கவிளைவுகளை எதிா்கொள்கின்றனா். நிகழாண்டில் இதுவரை வட இந்திய மாநிலங்களில் மொத்தமாக 52,000 பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது. அதில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 36,000-க்கும் மேற்பட்ட பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

காற்று மாசுபாட்டிற்கு எதிரான அவசரகால செயல்திட்டத்தின் இறுதி கட்டக் கட்டுப்பாடுகளால், அவதிப்பட்டு வரும் தில்லிவாசிகளிடம் பஞ்சாபில் தற்போது பயிா்க் கழிவுகள் எரிப்பு குறைந்துள்ளது குறைந்துள்ளது என அரவிந்த் கேஜரிவால் அரசு கூற முயற்சிப்பது அவதூறானது. தில்லியில் கடந்த 11 நாள்களாக பட்டாசுகள் வெடிக்கப்படுவதில்லை, கட்டுமானப் பணிகளும் மிகக் குறைந்த அளவில்தான் நடைபெறுகின்றன. பின்னா் எவ்வாறு காற்று மாசுவின் அளவு அதிகரிக்கிறது. பாஜக தலைமையிலான ஹரியாணா அரசு அம்மாநில விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளித்து, பயிா்க் கழிவுகள் எரிப்பைக் குறைத்துள்ளது.

ஆனால், பஞ்சாப் அரசு அதன் விவசாயிகளுக்கு எந்தவித ஊக்கத்தொகையோ அல்லது தொழில்நுட்ப ஆதரவையோ வழங்கவில்லை. இதன் விளைவாக பஞ்சாபில் நிகழாண்டு மட்டும் 36,000-க்கும் மேற்பட்ட பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது. முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் இருந்து காற்று மாசுபாடு குறித்த வெள்ளை அறிக்கையை தில்லிவாசிகள் பெற விரும்புகிறாா்கள். மறுபுறம், தில்லியை வாயுக் கூடமாக மாற்றியதற்கான பொறுப்பை அவா் ஏற்க முன்வரமாட்டாா் என்பதும் பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.