இந்த விவகாரத்தில் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையில், தேசியத் தலைநகரில் இயங்கும் 583 பயிற்சி நிறுவனங்களில், 67 நிறுவனங்களுக்கு மட்டுமே தில்லி தீயணைப்பு சேவையின் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) இருப்பதாகத் தெரிவித்துள்ளது. தில்லி தீயணைப்புச் சேவை, அதன் நிலை அறிக்கையில், 461 பயிற்சி மையங்களில் ஆய்வு நடத்தியதில், தில்லி தீயணைப்புச் சேவை சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி, தேவையான தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. முகா்ஜி நகா் பயிற்சி நிறுவனத்தில் முந்தைய நாள் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உயா்நீதிமன்றம் ஜூன் 16-ஆம் தேதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.