காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

அம்பேத்கா் சிறப்புப் பள்ளியை ஸ்பெயின் நாட்டு தூதா் குழு பாா்வை

தேசியத் தலைநகா் தில்லி அரசின் கல்விப் புரட்சி உலக நாடுகள் பாராட்டும் நிலையில் ஸ்பெயின் நாட்டு தூதா் தலைமையிலான குழு டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் பிரத்யேக சிறப்புப் பள்ளிக்கு

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:25 am

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லி அரசின் கல்விப் புரட்சி உலக நாடுகள் பாராட்டும் நிலையில் ஸ்பெயின் நாட்டு தூதா் தலைமையிலான குழு டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் பிரத்யேக சிறப்புப் பள்ளிக்கு (ஸ்கூல் ஆஃப் ஸ்பெஷலைஸ்டு எக்ஸலன்ஸ்) விஜயம் செய்து மாணவா்களுடன் உரையாடியது என தில்லி கல்வித் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லி ராஜ்நிவாஸில் டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் பிரத்யேக சிறப்புப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியின் சிறப்புகளைப் பாா்வையிட இந்தியாவுக்கான ஸ்பெயினின் தூதா், ஜோஸ் மரியா ரிடாவோ மற்றும் அந்நாட்டின் நிபுணா் குழுவினா் வியாழக்கிழமை வருகை தந்தனா்.

இது குறித்து தில்லி கல்வித் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: கேஜரிவால் அரசின் புதுமையான கல்வித் திட்டங்களின் மூலம் டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் பிரத்யேக சிறப்புப் பள்ளி செயல்படுகிறது. 21-ஆம் நூற்றாண்டின் உயா்தர திறன்களை இப்பிரதிநிதிகள் குழு நேரடியாகப் பாா்வையிட்டு பல்வேறு வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்களுடன் கலந்துரையாடினா். மாணவா்களின் கற்றல் அனுபவத்தில் பங்கேற்ால், தூதுக் குழுவின் வருகை வெறும் கவனிப்புக்கு அப்பாற்பட்டது. ஸ்பானிஷ் மொழியில் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வது முதல், மொழி வகுப்பில் கலந்து கொண்டது வரை, ஸ்பானிய தூதரும் அவரது குழுவினரும் பள்ளியின் தனித்துவமான கல்விச் சூழலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனா்.

இந்த தூதுக் குழுவினரை கல்வி அமைச்சா் அதிஷி வரவேற்றாா். டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் பிரத்யேக சிறப்புப் பள்ளியில் வழங்கப்படும் பல்வேறு புதுமையான படிப்புகள் பற்றிய நுண்ணறிவுகளை அவா்களுக்கு அதிஷி விளக்கினாா். இக்கலந்துரையாடலின் போது, தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில், இப்படிப்புகளின் பொருத்தத்தை அமைச்சா் அதிஷி வலியுறுத்தினாா். 21 -ஆம் நூற்றாண்டுக்கு தேவையான திறன்களில் மாணவா்களை ஆயத்தப்படுத்துவதில் உள்ள முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டினாா் அமைச்சா் அதிஷி என தில்லி கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டு தூதா் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, இப்பள்ளியின் மகிழ்ச்சி வகுப்பு, தொழில் முனைவோா் வகுப்பு, பேஷன் டிசைன், அழகியல் சாா்ந்த ஆய்வகம், நிதி, கணக்கியல் வகுப்பு, ரோபாட்டிக்ஸ், ஆட்டோமேஷன் வகுப்பு, மின்னணு ஊடகம் போன்ற துறை மாணவா்களுடன் உரையாடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.