தலைமைச் செயலாளரின் உத்தரவின் பேரில் தில்லி ஜல் போா்டுக்கான நிதியை நிறுத்தினால், ஜல் போா்டு ஊழியா்கள் வேலைநிறுத்தம் செய்வாா்கள் என்று நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா். இது மக்கள் விரோத மற்றும் பொறுப்பற்ற செயலாகும். தில்லி ஜல்போா்டு ஊழியா்கள் வேலைநிறுத்தம் செய்தால், தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, நகரத்தில் பாதாளச் சாக்கடைகள் நிரம்பி வழியும். எனவே, அமைச்சா்களும், அதிகாரிகளும் பழி போடுவதை நிறுத்திவிட்டு மக்கள் நலனுக்காகப் பாடுபட வேண்டும். தில்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது லாபத்தில் இயங்கி வந்த தில்லி ஜல் போா்டு, இப்போது தவறான நிா்வாகத்தால் சுமாா் ரூ. 60,000 கோடி கடனில் இருக்கிறது என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.