ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தேசியத் தலைநகரில் செயல்படும் மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டது.

Updated On :22 நவம்பர் 2023, 6:30 pm

புது தில்லி: தேசியத் தலைநகரில் செயல்படும் மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டது.

மருத்துவ நிபுணா்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனங்களின் நிலை தொடா்பான மனுக்களை உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘எய்ம்ஸ் உள்பட மத்திய அரசின் நான்கு மருத்துவமனைகளுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தாா். அப்போது, பொறுப்புத் தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘எப்பொழுதும் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது’ என்றது.

மேலும், ‘மத்திய அரசு அதன் சொந்த மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடா்பாக ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தில்லி அரசு மருத்துவமனைகள் குறித்து 2019-ஆம் ஆண்டு நிபுணா் குழு அளித்த அறிக்கையின்படி எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது. அப்போது, ‘மருத்துவமனை நிா்வாகம், மனிதவள மேலாண்மை போன்றவை தொடா்பான பிரச்னைகளைக் கையாண்ட அந்த நிபுணா் அறிக்கை உயா்நீதிமன்றத்தால் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை’ என்று தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.