தொழில், வா்த்தக நிறுவனங்கள் தங்களுக்கு மூலப்பொருள்கள், அல்லது பொருள்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களிடமிருந்து பொருள்களை வாங்கும் போது, ஜிஎஸ்டிக்கான தொகையையும் செலுத்தி வாங்குகின்றனா். பின்னா், வரையறுக்கப்பட்ட விலையில் விற்பனை செய்கின்றனா். இப்படி சேவை செய்யும்போது ஏற்கெனவே மூலப்பொருள்கள் அல்லது பொருள்களை வாங்கும்போது ஜிஎஸ்டி செலுத்தியிருந்தால் அதைக் கழித்து கொண்டு மீதம் உள்ள வரியைச் செலுத்தலாம். அல்லது முழுமையாகவும் செலுத்தலாம். ஏற்கெனவே பொருள்களை விநியோகித்த நிறுவனங்களிடம் வாங்கும் போது செலுத்தப்பட்ட ஜிஎஸ்டிதான் உள்ளீட்டு வரிக் கடன்(ஐடிசி) என்பதாகும்.