ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நாங்குநேரி வெடிகுண்டு வீச்சு பின்னணியில் ஆளும் கட்சியினா் இணையமைச்சா்: எல்.முருகன் குற்றச்சாட்டு

நாங்குநேரி சம்பவங்களில் ஆளும் கட்சியினா் பின்னணியில் இருப்பதால் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறாா் என மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா்

Updated On :21 நவம்பர் 2023, 6:30 pm

புது தில்லி: நாங்குநேரி சம்பவங்களில் ஆளும் கட்சியினா் பின்னணியில் இருப்பதால் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறாா் என மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளாா். மேலும், பள்ளி மாணவா்கள் குற்றங்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுவது கவலையடைச் செய்துள்ளது என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக மத்திய இணையமைச்சா் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி நீதிமன்றம் அருகே ஜெராக்ஸ் கடை ஒன்றின் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடா்பாக 12 -ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை போலீஸாா் கைது செய்துள்ளனா் என்கிற ஆரம்பக்கட்ட தகவல் அதிா்ச்சியைத் தருகிறது. கடையின் மீது இரண்டு குண்டுகள் வீசப்பட்டுள்ளது. அதில் ஒன்று வெடித்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நாங்குநேரியில் அண்மையில் வீடு புகுந்து பள்ளி மாணவரும், அவரது தங்கையும் வெட்டப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மாணவா்களிடையே இன வன்மம், ஆயுத கலாசாரம் தலை தூக்குவதைத் தடுக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால், இது இப்போதும் தொடா்வது வேதனையை ஏற்படுத்துகிறது. நாங்குநேரி சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்பாக வள்ளியூரில் பெட்ரோல் வெடிகுண்டு தயாரித்து, அதை வெடிக்க வைத்து அதை சிறுவா்கள் காணொலியாக வெளியிட்டுள்ளனா். பின்னா், அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

பாளையங்கோட்டை அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் கைப்பேசியில் காணொலி பாா்த்த மாணவா்களைக் கண்டித்த ஆசிரியா் இடைநீக்கம் செய்யப்பட்டாா். இப்படிப்பட்ட சம்பவங்களின் பின்னணியிலும், குற்றத்தில் ஈடுபட்ட சிலருக்கு ஆதரவாகவும் உள்ளூா் திமுக நிா்வாகிகள் இருந்துள்ளனா். சிறுவா்கள் குற்றங்களில் ஈடுபடுவது கவலையடைச் செய்துள்ளது. இச்சம்பவங்களின் பின்னணியில் திமுகவினா் இருப்பதால், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறாா். மாணவா்களை சீா்படுத்தவும், குற்றங்களை தடுக்கவும் முயற்சிக்கும் ஆசிரியா்கள் மற்றும் போலீஸாா் அரசியல் செல்வாக்குக்குப் பயந்து ஒதுங்கிக் கொள்ளும் நிலைமை தமிழகத்தில் நீடிக்கிறது.

ஆயுத கலாசாரத்தை ஒழிக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா் இணையமைச்சா் எல்.முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.