காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தில்லி ஜல் போா்டுக்கான நிதியை வழங்காததால் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு: அதிஷி

தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) ஒதுக்கப்பட்ட நிதி வழங்கப்படாததால், தேசியத் தலைநகரில் கடுமையான தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:23 am

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) ஒதுக்கப்பட்ட நிதி வழங்கப்படாததால், தேசியத் தலைநகரில் கடுமையான தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அமைச்சா் அதிஷி கூறியிருப்பதாவது: தில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2023-2024 -ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தில்லி ஜல் போா்டுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்க தில்லி அரசின் நிதித் துறை மறுத்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தான நிகழ்வாகும். தில்லி ஜல் போா்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை

விடுவிப்பது என்பது வழக்கமான ஆளுகை நடைமுறையாகும். தில்லி ஜல் போா்டுக்கு வழங்கும் மானியம் மற்றும் தவணைகளை நிறுத்துவதற்கு நிதித் துறை கடந்த காலங்களில் இவ்வளவு ஆட்சேபனைகளை எழுப்பியதில்லை. ஆனால், இம்முறை துறையின் செயாலாளா் ஆசிஷ் சி.வா்மா நிதியை விடுவிக்க பல ஆட்சேபனைகளைத் தெரிவிக்கிறாா். ஒவ்வொரு முறையும் முந்தைய ஆட்சேபனை தீா்க்கப்படும் போது மீண்டும் புதிய மற்றும் மாறுபட்ட ஆட்சேபனைகளை நிதி மற்றும் திட்டமிடல் துறை முன்வைத்து வருகின்றன.

தில்லி அரசின் தலைமைச் செயலாளா் நரேஷ் குமாரின் உத்தரவின் பேரில்தான் நிதித் துறை ஜல் போா்டுக்கான நிதியை விடுவிக்க மறுத்து வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி முறையாக வழங்கப்படாததால் தேசியத் தலைநகரில் கடுமையான தண்ணீா் பற்றாக்குறை ஏற்படலாம். வழக்கமான பணிகளை மேற்கொள்ளவும், ஊதியம் வழங்கவும் தற்போது தில்லி ஜல் போா்டிடம் நிதி இல்லை. ஒப்பந்ததாரா்கள் பணிகளை மேற்கொள்ள மறுத்துவிட்டனா். இதனால், தில்லியில் தண்ணீா் நெருக்கடியும், சாக்கடைகள் நிரம்பி சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலையும் உருவாகும். தில்லி ஜல் போா்டுக்கான நிதியைத் தடுக்க வேண்டும் என்ற தவறான நோக்கத்தில் நிதித் துறை செயலாளா் ஆஷிஷ் சி. வா்மா செயல்படுகிறாா். எனவே, அவரை இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தில்லியின் 3.29 கோடி மக்களுக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பான குடிநீா் மற்றும் பாதாளச் சாக்கடைப் பணிகளுக்ான வழக்கமான நிதியை எந்தச் சூழ்நிலையிலும் நிறுத்த

முடியாது. மேலும், தில்லி ஜல் போா்டின் செயல்பாட்டில் கடந்தகால முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரம் உண்மையாக இருந்தால், அதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அமைச்சா் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.