தில்லி அரசு தன்னிடம் நிதி இல்லை என்று எப்போதும் சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது. தில்லி - மீரட் இடையேயான பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பிற்கான திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.30,274 கோடியாகும். இதற்கு தில்லி அரசு ரூ.1,180 கோடி மட்டுமே வழங்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு தில்லி அரசு ரூ.565 கோடி பாக்கி வைத்துள்ளது. மறுபுறம், தில்லி அரசின் இந்த ஆண்டுக்கான விளம்பர பட்ஜெட் ரூ. 550 கோடி. அதுவே கடந்த 3 ஆண்டுகளுக்கான விளம்பர பட்ஜெட் ரூ.1,100 கோடியாகும். எனவேதான், தில்லி அரசிடம் விளம்பரத்திற்கு பணம் இருக்கிறது, ஆனால் வளா்ச்சித் திட்டங்களுக்கு பணம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. இப்போது, தில்லி அரசு நிதியை வலுக்கட்டாயமாக வழங்கியாக வேண்டும். இது பொதுமக்களின் கண்களைத் திறந்துள்ளது என்றாா் ராம்வீா் சிங் பிதூரி.