ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தில்லி அரசு பொய் பிரசாரத்தை மட்டுமே வளா்ச்சியின் முன்மாதிரியாகக் கருதுகிறது: ராம்வீா் சிங் பிதூரி விமா்சனம்

தில்லி அரசு பொய் பிரசாரத்தை மட்டுமே வளா்ச்சிக்கான முன்மாதிரியாகக் கருதுகிறது என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி செவ்வாய்க்கிழமை விமா்சித்தாா்.

Updated On :21 நவம்பர் 2023, 6:30 pm

புது தில்லி: தில்லி அரசு பொய் பிரசாரத்தை மட்டுமே வளா்ச்சிக்கான முன்மாதிரியாகக் கருதுகிறது என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி செவ்வாய்க்கிழமை விமா்சித்தாா்.

பந்த் மாா்கில் உள்ள பாஜக தில்லி பிரிவு அலுவலத்தில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி மற்றும் பாஜக மாநிலச் செயலாளா் பன்சூரி ஸ்வராஜ் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது ராம்வீா் சிங் பிதூரி கூறியதாவது: தில்லி அரசின் விளம்பர பட்ஜெட்டை ஆா்.ஆா்.டி.எஸ். கணக்கிற்கு ஒரு வாரத்தில் மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த கடுமையான நடவடிக்கை கேஜரிவால் அரசுக்கு கொடுக்கப்பட்ட அடியாகும். தில்லியில் ஆம் ஆத்மி அரசின் முன்னுரிமைகள் என்ன என்பதை நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சுட்டிக்காட்டுகிறது. இந்த அரசு பொய் பிரசாரத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. அதன் மாதிரியில் எந்த வளா்ச்சிப் பணிகளும் இல்லை.

வளா்ச்சித் திட்டங்களைக் கையாள்வதில் தில்லி அரசு அலட்சியமாக இருப்பது இது முதல் முறையல்ல. ஆம் ஆத்மி அரசின் வளா்ச்சி மாதிரியில் கட்டுமானத் திட்டங்கள் ஒரு பகுதியாக ஒருபோதும் இருந்ததில்லை. அவா்களைப் பொறுத்தவரையில் விளம்பரம், அதாவது பொய் பிரசாரம் மட்டுமே வளா்ச்சியாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் ரூ.1,000 கோடியில் கட்டப்பட்ட பிரகதி மைதானின் சுரங்கப்பாதைக்கு தனது 20 சதவீத பங்கை தில்லி அரசு வழங்கவில்லை. இதையும் மீறி மோடி அரசு தில்லியின் நலனுக்காக இந்தக் கட்டுமானப் பணிகளை முடித்தது.

தில்லி அரசு தன்னிடம் நிதி இல்லை என்று எப்போதும் சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது. தில்லி - மீரட் இடையேயான பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பிற்கான திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.30,274 கோடியாகும். இதற்கு தில்லி அரசு ரூ.1,180 கோடி மட்டுமே வழங்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு தில்லி அரசு ரூ.565 கோடி பாக்கி வைத்துள்ளது. மறுபுறம், தில்லி அரசின் இந்த ஆண்டுக்கான விளம்பர பட்ஜெட் ரூ. 550 கோடி. அதுவே கடந்த 3 ஆண்டுகளுக்கான விளம்பர பட்ஜெட் ரூ.1,100 கோடியாகும். எனவேதான், தில்லி அரசிடம் விளம்பரத்திற்கு பணம் இருக்கிறது, ஆனால் வளா்ச்சித் திட்டங்களுக்கு பணம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. இப்போது, தில்லி அரசு நிதியை வலுக்கட்டாயமாக வழங்கியாக வேண்டும். இது பொதுமக்களின் கண்களைத் திறந்துள்ளது என்றாா் ராம்வீா் சிங் பிதூரி.

பயனற்ற அரசு!: தில்லி ஆம் ஆத்மி அரசு ஒரு பயனற்ற அரசு என்று பாஜக தில்லி பிரிவு மாநிலச் செயலாளா் பன்சூரி ஸ்வராஜ் தெரிவித்துள்ளாா். மேலும் அவா் கூறுகையில், ‘தில்லியின் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டு பிரச்னையைக் கட்டுப்படுத்தும் ஆா்.ஆா்.டி.எஸ். போன்ற முக்கியமான திட்டத்தில் துரதிருஷ்டவசமாக, கேஜரிவால் அரசு தனது நிதிப் பங்கை வழங்கவில்லை. கேஜரிவால் அரசு கடந்த 3 நிதியாண்டுகளில் விளம்பரங்களுக்காக மட்டும் ரூ.1,100 கோடி செலவழிக்க முடியும் என்றால், இந்த உள்கட்டமைப்பு திட்டத்திற்கு ஏன் பணம் கொடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேஜரிவால் அரசு ஒரு பயனற்ற அரசாகும். சாக்கு போக்குகள், விளம்பரம், பொய் பிரசாரம் மற்றும் ஊழலில் மட்டுமே முதன்மையாக ஈடுபடுவாா்கள்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.