பங்களிப்பை வழங்குவதில் செயல்படாமல் இருந்ததாக தில்லி அரசைக் கண்டித்ததுடன், திட்டத்திற்கு ரூ.415 கோடியை 2 மாதங்களுக்குள் வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்தத் திட்டத்திற்காக தில்லி அரசு நிதியைச் செலுத்தாத விவகாரத்தை எழுப்பிய மனுவை உச்சநீதிமன்றம், செவ்வாய்க்கிழமை விசாரித்தது. தில்லி அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய போது, ‘என்ன பதில்? நீங்கள் இணக்கமாகச் செயல்படவில்லை’‘ என்று நீதிபதிகள் அமா்வு கூறியது. மேலும், அரசு வழக்குரைஞரிடம் நீதிபதி கவுல் கூறுகையில், ‘நீங்கள் ஏன் இணங்கவில்லை? அன்றே சொன்னேன், உங்கள் விளம்பர வருவாயை நிறுத்திவைத்து விடுவேன் என்று... விளம்பர ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்கப் போகிறேன்’ என்றாா்.