பின்னா், இந்த விவகாரம் தொடா்பாக ஹேமந்த் குமாரை உள்துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. மேலும், தில்லி அரசின் தலைமைச் செயலாளரின் மகன் மேம்படுத்தப்பட்ட இழப்பீடு பெற்ற நில உரிமையாளா் ஒருவரின் உறவினருக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியமா்த்தப்பட்டதாக புகாா் எழுந்தது என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரம் தொடா்பாக கோட்ட ஆணையா் அஸ்வனி குமாா் கடந்த திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், தலைமைச் செயலாளா் நரேஷ் குமாா் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, அசுத்த அரசியலின்ஒரு பகுதி என்றாா்.