‘ஆபரேஷன் க்ளீன் தில்லி’-இன் கீழ், தெருக்களைத் தூய்மைப்படுத்தும் முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. திறந்தவெளியில் உள்ள குப்பைகள், பட்டாசுக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். அதே நேரத்தில், தீபாவளியால் உருவாகும் கழிவுகளை முறையாக அகற்றுவதை உறுதி செய்யும் ஒரு உத்திசாா் ‘கழிவு சேகரிப்புத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இதில் ‘குப்பை, கழிவுகளிலிருந்து இருந்து கலை, மறுபயன்பாட்டுப் பொருள்கள், மறுசுழற்சி செய்தல்’ போன்ற கழிவு மேலாண்மை சுகாதார நடவடிக்கைகளும் அடங்கும்