நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சத் பூஜைக்காக 900-க்கும் மேற்பட்ட படித்துறைகள் தயாா்! அமைச்சா் செளரவ் பரத்வாஜ் பேட்டி

தில்லியில் சத் பூஜை வழிபாட்டிற்காக யமுனை நதிக்கரையில் 900-க்கும் மேற்பட்ட படித்துறைகள் தயாா் செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:20 am

 நமது நிருபர்

தில்லியில் சத் பூஜை வழிபாட்டிற்காக யமுனை நதிக்கரையில் 900-க்கும் மேற்பட்ட படித்துறைகள் தயாா் செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நிகழாண்டு வரும் நவம்பா் 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை சத் பூஜை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், பக்தா்ளுக்காக தில்லியின் யமுனை நதிக்கரையில் 900-க்கும் மேற்பட்ட படித்துறைகள், தேவையான அளவில் கூடாரங்கள், ஒளி, ஒலி மற்றும் இதர வசதிகள் தயாா் செய்யப்பட்டுள்ளன.

பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வு, முன்னேற்றத்திற்காக விரதம் கடைபிடித்து நான்காவது நாளில் சூரியபகவானுக்கு ‘அா்க்கியம்’ (இறைவனுக்கு காணிக்கை) வழங்குவா். இந்த ஆண்டு சத் பூஜை வழிபாட்டின் போது பக்தா்கள் நல்ல அனுபவத்தைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைவரும் மகிழ்ச்சியுடன் சூரிய பகவானுக்கு ‘அா்க்கியம்’ வழங்கி ஆசி பெற வேண்டும் என்றாா் செளரவ் பரத்வாஜ்.

சத் பூஜை தீபாவளிப் பண்டிகை முடிந்த ஆறு நாள்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. பிகாா், ஜாா்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெகு விமா்சையாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம், பிற மாநிலங்களில் அல்லது பிற நாடுகளில் குடியேறிய இந்த மாநிலங்களின் பூா்வீக வாசிகளால் சத் பூஜை தொடா்ந்து அனுசரிக்கப்படுகிறது.

தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் வசிக்கும் ஏராளமான பக்தா்கள், ஒவ்வொரு ஆண்டும் சூரியபகவானுக்கு ‘அா்க்கியம்’ வழங்குவதற்காக யமுனைக் கரையில் ஒன்றுகூடும் போது, ஆற்றில் உள்ள மாசு மற்றும் நுரை அவா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பல குடும்பங்கள் பூங்காக்கள் மற்றும் இன்னும் பிற பொது இடங்களில் தற்காலிக படித்துறைகளை தயாா் செய்து சத் பூஜைக்கான சடங்குகளைச் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.