தில்லி ஐடிஓ பகுதியில் உள்ள யமுனை நதிக்கரையில் சத் பூஜைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கட்சியின் நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை அா்விந்தா் சிங் லவ்லி ஆய்வு செய்தாா். பின்னா், அது தொடா்பாக அவா் கூறியதாவது: தில்லி மக்கள் காற்று மாசுபாடு, நீா் மாசு போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு தில்லி ஆம் ஆத்மி மற்றும் மத்திய பாஜக அரசுகளின் திறமையின்மையும், செயலற்றத் தன்மையும்தான் காரணம். தில்லி அரசு விளம்பரத்திற்காக கோடிகளை விரயம் செய்தது. ஆனால், மாசுபட்ட யமுனையை சுத்தப்படுத்தவும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் கவலைப்படவில்லை. மாசு பிரச்னையில் அரசியல் பலி விளையாட்டுக்கள் மட்டுமே நடக்கிறது.