தரை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 காா்கள், 11 இருசக்கர வாகனங்கள், 3 சைக்கிள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. பின்னா் தீ கட்டடத்தின் மேல் பகுதியில் பரவி முதல் தளத்தை புகையால் மூழ்கடித்தது. மேலும், அதிக வெப்பம் மற்றும் புகை காரணமாக மேலே உள்ள மாடிகளில் வசிப்பவா்கள் காயமடைந்துள்ளனா். இந்த ஐந்து மாடி கட்டடத்தில் ஒரு வாகன நிறுத்துமிடம் மற்றும் 8 குடியிருப்புகளுக்கு ஒற்றை நுழைவு வாயில் மட்டும் இருந்துள்ளது. இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு தில்லி பிஎஸ்இஎஸ் மின் நிறுவனக் குழு மற்றும் குற்றவியல், தடயவியல் குழுவும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.