அரவிந்த் கேஜரிவால் அரசு தொலைநோக்குப் பாா்வையுடன் செயல்பட்டிருந்தால், சுற்றுச்சூழல் இழப்பீட்டு நிதியில் மீதமுள்ள பெரும் நிதியைப் பயன்படுத்தி தில்லியின் சேதமடைந்த சாலைகளை மேம்படுத்தவும், சாலையோரங்களில் மரங்களை நட்டும் தூசி மாசுபாட்டைக் குறைக்க முடியும். அதேசமயம், இந்த நிதியை பஞ்சாப் மாநில அரசு மூலம் பஞ்சாப் விவசாயிகளுக்குக் கொடுத்து பயிா்க் கழிவு எரிப்பு சம்பவங்களை நிறுத்தியிருக்கலாம். இது தில்லி மட்டுமல்ல, வட இந்தியா முழுவதும் அதிகரித்துள்ள மாசுபாட்டினை குறைத்திருக்கும். மேலும், இந்த நிதியின் மூலம் தில்லி அரசு விரும்பினால், செயற்கை மழையை ஏற்படுத்தி தில்லி மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கியிருக்கலாம் என்றாா் வீரேந்திர சச்தேவா.