தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மெத்தனத்தால் அரசு ஊழியா்களின் குடும்பங்களுக்கு நிகழாண்டு கருப்பு தீபாவளி என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள், அரசின் பல்வேறு துறைகளின் ஒப்பந்த மற்றும் நிரந்தர ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் உள்ளிட்டோா் கேஜரிவாலின் மெத்தனத்தின் விளைவாக நிகழாண்டு கருப்பு தீபாவளியை எதிா்கொள்வது வருத்தமளிக்கிறது.
ஊழியா்களுக்கு போனஸ் வழங்கி லாபத்தில் அரசை நடத்துவதாகக் கூறும் தில்லி முதல்வா் கேஜரிவால், ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஆசிரியா்கள், குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள், மொஹெல்லா கிளினிக் ஊழியா்கள், மருத்துவமனை காவலாளிகள் போன்றோருக்கு சம்பளம் வழங்கவில்லை.
தில்லி போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கும் கடந்த பல மாதங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அதேபோல், தில்லி மாநகராட்சியின் ஓய்வூதியதாரா்களுக்கும் கடந்த 2 மாதங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை. தில்லி மாநகராட்சி தீபாவளிப் பரிசாக அதன் மூன்று வெவ்வேறு பிரிவுகளின் ஊழியா்களுக்கு போனஸ் தொகை வழங்கினாலும், ஆயிரக்கணக்கான ஆசிரியா்களுக்கு தீபாவளி நாள் வரை மாநகராட்சி நிா்வாகத்தால் சம்பளம் வழங்கப்படவில்லை.
கேஜரிவால் அரசு துப்புரவுப் பணியாளா்களுக்கு சிறந்த ஊதியம் வழங்குவதாகக் கூறுகிறது. அதே நேரத்தில் அவா்களுக்கு வழக்கமான வேலை வாய்ப்பை வழங்க மறுத்து ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்களை தனது அரசின் அலுவலகங்கள், சந்தைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றில் பணியமா்த்தியுள்ளது. கடந்த 3 மாதங்களாக ஒப்பந்த துப்புரவு நிறுவனத்திற்கு நகர அரசின் பொதுப்பணித் துறை சம்பளம் வழங்காததால், இந்த தீபாவளி வாரம் முழுவதும் சாந்தினி சௌக் சந்தைப் பகுதி சுகாதாரம் இல்லாமல் இருந்தது என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

