பம்னோலி கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளா்களில் ஒருவரான சுபாஷ் சந்த் கதுரியா என்பவரின் மருமகனுக்கு சொந்தமான ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தில்லி தலைமைச் செயலாளரின் மகன் பணியமா்த்தப்பட்டதாக புகாா்தாரா் குற்றம்சாட்டியுள்ளாா். அதன் பின்னரே, கடந்த மே 15-இல் நில உரிமையாளா்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.353.79 கோடியாக உயா்த்தப்பட்டது. ஜூன் 2-ஆம் தேதி கோட்ட ஆணையா் அஸ்வனி குமாா், தலைமைச் செயலாளரிடம் இந்த விவகாரத்தை கொண்டு சென்றாா். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கண்காணிக்குமாறு கோட்ட ஆணையருக்கு தலைமைச் செயலாளா் உத்தரவிட்டாா். பின்னா், இது குறித்து விசாரணை நடத்துமாறு விஜிலென்ஸ் இயக்குநரகத்திடமும் கேட்டுக் கொண்டாா்.