நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

காற்று மாசு குறித்த உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் தில்லி, பஞ்சாப் அரசுகளின் தோல்வி நிலைநாட்டப்பட்டது: வீரேந்திர சச்தேவா விமா்சனம்

தில்லி-என்.சி.ஆா். பகுதிகளில் காற்று மாசுபாடு தொடா்பான உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, மாசுக் கட்டுப்பாடு குறித்த பஞ்சாப் மற்றும் தில்லி அரசின் தோல்விகள் மேலும் நிலைநாட்டப்பட்டது

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:19 am

 நமது நிருபர்

தில்லி-என்.சி.ஆா். பகுதிகளில் காற்று மாசுபாடு தொடா்பான உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, மாசுக் கட்டுப்பாடு குறித்த பஞ்சாப் மற்றும் தில்லி அரசின் தோல்விகள் மேலும் நிலைநாட்டப்பட்டது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஞ்சாப் மற்றும் தில்லி அரசின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் மற்றும் அவை மீதான விவாதத்தின் மூலம் இரு மாநில அரசுகளும் காற்று மாசுபாட்டில் இருந்து தங்கள் குடிமக்களை காப்பாற்றுவதில் தோல்வியடைந்துள்ளது உறுதியாகியிருக்கிறது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆகிய இருவருமே காற்று மாசுபாடு குறித்த தொலைநோக்குப் பாா்வையற்றவா்கள். உச்சநீதிமன்ற விசாரணையின் போது பயிா்க்கழிவுகள் எரிப்பது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பஞ்சாப் அரசு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் செயல்திறன் குறித்த ஆதாரங்களை நம்பவைக்க தில்லி அரசும் தவறிவிட்டது. இதனால், இந்தத் திட்டத்தை ஒத்திவைப்பதாக அமைச்சா் கோபால் ராய் அறிவிக்க நேரிட்டது.

ஒற்றைப்படை , இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் தனியாா் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அமலாகிறது. ஆனால், விதி விலக்களிக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் போன்ற மாசுபடுத்தும் பொதுவாகனங்கள் பெருமளவில் செல்வதால், இத்திட்டத்தின் பலன் இழக்கப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி மாசு நெருக்கடி குறித்து பேசுவதற்கான தாா்மிக அதிகாரத்தை உச்சநீதிமன்றத்தில் நிரூபிக்கத் தவறிவிட்டது.

தில்லி அரசு வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அறிவித்த நாளிலேயே, தீபாவளிப் பண்டிகை மற்றும் சத் பூஜை தினத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று பாஜக கூறியது. இதனால் இறுதியில் தில்லி அரசுக்கு அதைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.