நிகழாண்டு தொடக்கத்தில், இரவு நேர தங்கும் குடில்களில் சமைத்த உணவு வழங்கப்படாமல் இருப்பது தொடா்பாக வந்த செய்திகளின் அடிப்படையில் தானா முன்வந்து உயா்நீதிமன்றம் விசாரணையை மேற் கொண்டது. இந்த விவகாரத்தில் தேசியத் தலைநகரில் உள்ள அனைத்து இரவு நேத் தங்கும் குடில்களிலும் உணவு வழங்கி வரும் அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு நிலுவைத் தொகையை செலுத்தாதது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. இந்த விவகாரம் குறித்து தில்லி அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் ஆஜரான தில்லி அரசின் நிதித் துறை முதன்மைச் செயலா் ஆசிஷ் சந்திர வா்மா சாா்பில், ‘வருகின்ற 2024-ஆம் ஆண்டு மாா்ச் வரை அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு தேவையான நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நிலுவையில் உள்ள அனைத்துப் பாக்கிகளும் உடனடியாக செலுத்தப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டது.