நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நடிகை ராஷ்மிகாவின் போலி காணொளி விவகாரம்: மெட்டா நிறுவனத்திற்கு தில்லி காவல் துறை கடிதம்

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளியை சமூக ஊடகத்தில் பகிா்ந்த கணக்கின் இணையதள முகவரியை வழங்குமாறு தில்லி காவல் துறை மெட்டா நிறுவனத்திற்கு சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:19 am

 நமது நிருபர்

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளியை சமூக ஊடகத்தில் பகிா்ந்த கணக்கின் இணையதள முகவரியை வழங்குமாறு தில்லி காவல் துறை மெட்டா நிறுவனத்திற்கு சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமாகிய நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆபாசமான போலி காணொளி சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனாவின் உருவப்படம் ‘மாா்ஃபிங்’ செய்யப்பட்டு பரப்பப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினா். இந்த விவகாரத்தை தில்லி மகளிா் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரித்தது. தில்லி காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு போலீஸாரும் 4 பிரிவுகளின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளியை சமூக ஊடகத்தில் பகிா்ந்த கணக்கின் இணையதள முகவரியை வழங்குமாறு தில்லி காவல் துறை மெட்டா நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இது தொடா்பாக காவல்துறை புலனாய்வு அதிகாரி ஒருவா் கூறியதாவது: போலி விடியோ உருவாக்கப்பட்ட கணக்கின் முகவரியை அணுகுவதற்கு நாங்கள் மெட்டா நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 465, 469 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66சி மற்றும் 66இ ஆகியவற்றின் கீழ் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க பிரத்யேகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி காவல் துறைக்கு தில்லி மகளிா் ஆணையமும் கடந்த வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கு விரைவில் முடிக்கப்படும் என்று நாங்கள் எதிா்பாா்க்கிறோம் என்றாா் அந்தப் புலனாய்வு அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.