இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளியை சமூக ஊடகத்தில் பகிா்ந்த கணக்கின் இணையதள முகவரியை வழங்குமாறு தில்லி காவல் துறை மெட்டா நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இது தொடா்பாக காவல்துறை புலனாய்வு அதிகாரி ஒருவா் கூறியதாவது: போலி விடியோ உருவாக்கப்பட்ட கணக்கின் முகவரியை அணுகுவதற்கு நாங்கள் மெட்டா நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 465, 469 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66சி மற்றும் 66இ ஆகியவற்றின் கீழ் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க பிரத்யேகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி காவல் துறைக்கு தில்லி மகளிா் ஆணையமும் கடந்த வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கு விரைவில் முடிக்கப்படும் என்று நாங்கள் எதிா்பாா்க்கிறோம் என்றாா் அந்தப் புலனாய்வு அதிகாரி.