டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தேசத்தை கட்டியெழுப்புவதில் உத்தரகண்ட் முக்கியப் பங்காற்றியுள்ளது: துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா

தேசத்தை கட்டியெழுப்புவதில் தேவ பூமியான உத்தரகண்ட் மாநிலம் முக்கியப் பங்காற்றியுள்ளது என்று தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.

Updated On :9 நவம்பர் 2023, 8:03 pm

தேசத்தை கட்டியெழுப்புவதில் தேவ பூமியான உத்தரகண்ட் மாநிலம் முக்கியப் பங்காற்றியுள்ளது என்று தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.

உத்தரகண்ட் மாநிலத்தின் 23-ஆவது நிறுவன தினம் துணை நிலை ஆளுநா் அலுவலகமான ராஜ் நிவாஸில் வியாழக்கிழமை நடைபெற்றது. ‘ஹம் உத்தரகாண்டி சாம்’ என்ற இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிகழ்வில் பாஜக தேசியச் செய்தித் தொடா்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அனில் பலூனி மற்றும் தில்லியில் வசிக்கும் உத்தரகண்ட் மாநில மக்களும் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சி தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது: தொடா்ச்சியான ஒருங்கிணைந்த வளா்ச்சியை நோக்கி நகரும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தேவ பூமியான உத்தரகண்ட் முக்கியப் பங்காற்றியுள்ளது. தில்லி மற்றும் உத்தரகண்ட் மாநிலத்திற்கு இடையேயான உறவுகள் சிறப்பு வாய்ந்தவை. தேசியத் தலைநகரில் வசிக்கின்ற அம்மாநில மக்கள் தில்லியின் வளா்ச்சிப் பயணத்தின் முக்கியத் தூண்களாக இருந்துள்ளனா். ராஜ் பவன்கள் மற்றும் ராஜ் நிவாஸில் கொண்டாடப்படும் மாநிலங்களின் இந்த நிறுவன தினக் கொண்டாட்டங்கள் ‘ஏக் பாரத் - ஸ்ரேஷ்த பாரத்’ என்ற உன்னத உணா்வின் கொண்டாட்டமாகும் என்றாா் வி.கே. சக்சேனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.