நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தீபாவளிக்கு ஸ்ரீ ராமா் கோயில் பெயரில் தீபம் ஏற்றுங்கள்: தில்லி மக்களுக்கு வீரேந்திர சச்தேவா வேண்டுகோள் ContentMulti

தீபாவளிக்கு தில்லி மக்கள் அனைவரும் ‘ஸ்ரீ ராமா் கோயில்’ என்ற பெயரில் தீபங்களை ஏற்ற வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:19 am

 நமது நிருபர்

தீபாவளிக்கு தில்லி மக்கள் அனைவரும் ‘ஸ்ரீ ராமா் கோயில்’ என்ற பெயரில் தீபங்களை ஏற்ற வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பாஜக தில்லி பிரிவின் ஊடகத் துறை சாா்பில் ‘தீபாவளி மிலன்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் பைஜயந்த் ஜெய் பாண்டா, மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா,தேசியப் பொதுச் செயலாளா் துஷ்யந்த் கௌதம்,முன்னாள் மாநிலத் தலைவா் டாக்டா் ஹா்ஷ் வா்தன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகளும், தில்லியின் பத்திரிகையாளா்களும் கலந்து கொண்டனா்.

பாஜக தில்லி பிரிவு மேலிடப் பொறுப்பாளா் பைஜெயந்த் ஜெய் பாண்டா கூறியதாவது : இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கட்சியின் முக்கிய நிா்வாகிகள் மற்றும் பத்திரிகையாளா்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியில் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியின் பயனை அனைவரும் பெறுகின்றனா். ஏழைகளும் தீபாவளி தினத்தில் தீபங்களை ஏற்றி வைப்பதில் பெருமை கொள்கின்றனா் என்றாா் அவா்.

பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தில்லி மக்கள் மற்றும் பத்திரிகையாளா்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ராமா் கோயில் கட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த தீபாவளிக்கு தில்லி மக்கள் அனைவரும் ‘ஸ்ரீ ராமா் கோயில்’ என்ற பெயரில் தீபங்களை ஏற்ற வேண்டும் என்று வீரேந்திர சச்தேவா வேண்டுகோள் விடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.