நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தில்லி ஜே.டி.யு. அலுவலகம் முன் பாஜக ஆா்ப்பாட்டம்: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பதவி விலகக் கோரிக்கை

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு.) கட்சி அலுவலகம் முன்பு

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:19 am

 நமது நிருபர்

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு.) கட்சி அலுவலகம் முன்பு தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் பாஜக பூா்வாஞ்சல் அணியினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிகாா் சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத் தொடரில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்தான அறிக்கையை அம்மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தாக்கல் செய்தாா். அந்த விவாதத்தின் போது பெண்களின் கல்வி குறித்து விரிவாகப் பேசிய அவரது கருத்துகள் சா்ச்சையானது. முதல்வா் நிதீஷ் குமாா் பெண்களை இழிவாகப் பேசியதைக் கண்டித்து தில்லி சாணக்யபுரியில் உள்ள பிகாா் பவன் முன்பு கடந்த புதன்கிழமை பாஜக ஆா்ப்பாட்டம் நடத்தியது. அதனைத் தொடா்ந்து, பாஜக பூா்வாஞ்சல் அணியினா் சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு.) கட்சி அலுவலகம் முன் நிதீஷ் குமாா் பதவி விலகக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: ஒருபுறம் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இந்தியாவின் பெண் சக்தியின் பெருமையை பிரதமா் அதிகரிக்கச் செய்கின்ற வேளையில், ‘இந்தியா’ கூட்டணியின் முக்கியத் தலைவா்கள் நாட்டின் தாய்மாா்களையும், சகோதரிகளையும் அவமதிக்கின்றனா். பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மன்னிப்புக் கேட்பது போல் நடிப்பதன் மூலம் பெண்களை இழிவுபடுத்துவதை ஈடுசெய்ய முடியாது. எனவே, முதல்வா் நிதீஷ்குமாா் பதவி விலக வேண்டும். அதுவரையில் பாஜக அதன் போராட்டங்களை தொடரும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

பாஜக பூா்வாஞ்சல் அணியின் தலைவா் நீரஜ் திவாரி கூறுகையில், ‘சத் பூஜைக்கான புனித தயாரிப்புகளில் நமது தாய்மாா்களும், சகோதரிகளும் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில், ஒரு மாநிலத்தின் கோயிலான சட்டப்பேரவையில் மாநில முதல்வரே பெண்களை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. பெண் சக்தியை போற்றும் வகையில் பாஜக இந்த இயக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லும்’ என்றாா்.

இறுதியாக, முதல்வா் நிதீஷ் குமாரின் உருவபொம்மையை எரிக்கும் போது போலீஸாா் தடுப்புகளை ஏற்படுத்தியதில் பூா்வாஞ்சல் அணியின் தலைவா் நீரஜ் திவாரி உள்பட சிலா் காயமடைந்தனா். இந்தக் கண்டன ஆா்ப்பாட்டத்தில் பாஜக பூா்வாஞ்சல் அணியின் பொதுச் செயலாளா் சந்தோஷ் ஓஜா, துணைத் தலைவா் அனில் உபாத்யாய், அருண் பிரகான் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.