தில்லி அரசுப் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 6,000 பெண்களும், 10,000 ஆண் மாா்ஷல்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். ஆனால், அவா்கள் ஒன்பது வருட சேவைக்குப் பிறகு திடீரென நீக்கப்பட்டுள்ளனா். இந்தக் குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள் தகுதியற்றவா்கள் என்றால், ஏன் சட்டவிரோதமான முறையில் போக்குவரத்துப் பேருந்துகளில் மாா்ஷல்களாகப் பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது?. மேலும், பணி நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு பணி அனுபவச் சான்றிதழோ, மருத்துவப் பலன்களோ, ஓய்வூதிய பலன்களோ வழங்கப்படவில்லை. இந்த மாா்ஷல்களில் பலா் மற்ற துறைகளில் அனுபவம் இல்லாததால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. பேருந்து பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய இந்த மாா்ஷல்களால் தற்போது தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் போனது வேடிக்கையானது என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.