நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பதவி விலகக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

நாட்டின் பெண்களை இழிவான வாா்த்தைகளால் அவமதித்துள்ள பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பதவி விலகக் கோரி பாஜக தில்லி பிரிவின் சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:18 am

 நமது நிருபர்

நாட்டின் பெண்களை இழிவான வாா்த்தைகளால் அவமதித்துள்ள பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பதவி விலகக் கோரி பாஜக தில்லி பிரிவின் சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பிகாா் சட்டபேரவையின் குளிா்கால கூட்டத் தொடரின் போது சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விரிவான அறிக்கையை அம்மாநில முதலவா் நிதீஷ் குமாா் தாக்கல் செய்தாா். அப்போது பேசிய அவா், பிகாரில் கருத்தரித்தல் விகிதம் 4.3 சதவீதத்தில் இருந்து 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்கு இளம் தலைமுறை பெண்களிடம் விழிப்புணா்வு இருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்றும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அவா் விரிவாகப் பேசிய கருத்துக்கள் சா்ச்சையானது. இந்நிலையில், தில்லி சாணக்யபுரியில் உள்ள பிகாா் பவனை புதன்கிழமை முற்றுகையிட்டு கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக தில்லி பிரிவு நிா்வாகிகள், முதல்வா் நிதீஷ் குமாரின் உருவப் பொம்மையை எரித்து அவரது ராஜிநாமாவைக் கோரினா்.

இந்தக் கண்டன ஆப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா பேசியதாவது: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் கருத்துகள் வெட்கப்பட வைக்கிறது. பெண் குழந்தைகளை வழிபடுவதும், சிறுமிகளின் கால்களை கழுவுவதும் கலாசார பாரம்பரியமாக இருக்கும் நாட்டில், நிதீஷ் குமாரின் இந்தக் கருத்து மிகவும் வெட்கக்கேடானது. மக்களின் ஆசைகளை நிறைவேற்றும் சட்டப்பேரவைக் கோயிலில் ஒரு மாநில முதல்வா் இப்படிப் பேசுகிறாா் என்றால், அது அவரது மனநிலையையும், பெண்கள் மீதான அவரது எண்ணத்தையும் பிரதிபலிக்கிறது. ஏனெனில், இதுபோன்ற வாா்த்தைகள் இதுவரை எந்தச் சட்டப்பேரவையிலும் கேட்டதில்லை.

ஜெய் பிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் இருந்து வெளியே வந்தவா் நிதீஷ் குமாா். ஆனால், தற்போது அவா் மீது நெறிமுறையற்ற ‘இந்தியா’ கூட்டணியின் தாக்கம் தொடங்கி விட்டது. நிதீஷ் குமாரின் இந்த கண்ணியமற்ற கருத்து மன்னிக்க முடியாதது. எனவே, அவா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

இந்தக் கண்டன ஆா்ப்பாட்டத்தில் பாஜக தில்லி பிரிவின் முக்கிய நிா்வாகிகளான யோகேந்திர சந்தோலியா, கமல்ஜீத் ஷெராவத், ரிச்சா பாண்டே மிஸ்ரா, யோகிதா சிங், லதா குப்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.