ஊா்திகளுக்கான பொருள்களை தோ்ந்தெடுத்தல், ஒழுங்கமைத்தல், செயல்முறை போன்றவற்றை கலாசார அமைச்சம் அட்டவணைப்படுத்தியுள்ளது. ஊா்தி உருவாக்கத்தில் நெகிழி பயன்பாட்டை தவிா்த்தல், அதிகபட்ச தொழில் நுட்பப் பயன்பாடு, மெகட்ரானிக்ஸ், ரோபாட்டிக்ஸ் பயன்படுத்துதல், முப்பரிமாணம் (3 டி) உள்ளிட்டவை இதில் அடக்கம். அணிவகுப்புக்குப் பிறகு முக்கியமான இடத்தில் காட்சிப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு ஊா்திகள் உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் துறைகளுக்கும் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.