கேஜரிவால் காணொளி காட்சி வாயிலாக அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துகிறாா், அவா் நோ்மையானவராக இருந்தால் மாசுபாடு குறித்து எத்தனை கூட்டங்களை நடத்தினாா் என்பதை அவா் சொல்ல வேண்டும். நவம்பா் 6-ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின் படி, மொத்தம் 29,641 பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் பஞ்சாபில் மட்டும் 20,000-க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தில்லியின் மாசுபாட்டைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமானால், தில்லி அரசு ஆண்டு முழுவதும் உழைக்க வேண்டும். ஆனால், ,தில்லியின் வளா்ச்சியில் அக்கறை இல்லாதவராகவும், அரசியல் சுற்றுலாவில் மும்முரமாக இருக்கும் ஒருவரை தில்லி முதல்வராக மக்கள் தோ்வு செய்துள்ளது வருத்தமளிக்கிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.