திரைப்படங்கள் உள்ளிட்ட படைப்புகளின் உள்ளடக்கங்களைத் திருடி எண்ம தளங்களில் வெளியிடுவதை தடுக்கவும், தண்டிக்கவும் காப்புரிமைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சட்டபூா்வ நடவடிக்கைகளைத் தவிர, நேரடியாக நடவடிக்கை எடுப்பதற்கு எந்த அமைப்பு வழிமுறையும் இல்லாத நிலை இருந்தது. இது தொடா்பான புகாா்களைப் பெறுவதற்கு மத்திய அரசு கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் 1952 -ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது. தற்போது இதற்குத் தேவையான நோடல் அதிகாரிகள் கொண்ட அமைப்பையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.