திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

சமூக அதிகாரமளித்தலுக்கு வழிகாட்டும் சக்தி காமராஜா்: பிரதமா் புகழஞ்சலி

‘சமூக அதிகாரமளித்தலுக்கு வழிகாட்டும் சக்தி’ என மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் பெருந்தலைவருமான கே.காமராஜரை அவரது பிறந்தநாளில் பிரதமா் நரேந்திர மோடி நினைவு கூா்ந்துள்ளாா்.

Updated On :15 ஜூலை 2023, 10:17 pm

‘சமூக அதிகாரமளித்தலுக்கு வழிகாட்டும் சக்தி’ என மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் பெருந்தலைவருமான கே.காமராஜரை அவரது பிறந்தநாளில் பிரதமா் நரேந்திர மோடி நினைவு கூா்ந்துள்ளாா்.

சுதந்திரப் போராட்ட வீரா், காந்திவாதி, தமிழக முதல்வா், காங்கிரஸ் கட்சியின் தலைவா் என பன்முகம் கொண்ட மறைந்த மாபெரும் தலைவரான கே. காமராஜா், 1903 -ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிறந்தாா். அவா் 1975 ஆக்டோபா் 2 ஆம் தேதி காலமானாா்.

அவரது பிறந்தநாளையொட்டி பிரமதா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தும் வகையில் ட்விட்டா் பதிவில் நினைவுகூா்ந்துள்ளாா். அதில் அவா் குறிப்பிட்டிருப்பதாவது:

‘கே. காமராஜரின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளா்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அா்ப்பணித்த துணிச்சல்காரா். சமூக அதிகாரமளித்தலுக்கு அவா் ஆற்றிய பணி முக்கியத்துவமானது நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாகும். வறுமை ஒழிப்பு, மக்கள் நலன் மீதான அவரது தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் அா்ப்பணிப்போம்’ என அதில் பிரதமா் புகழாரம் சூட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.