மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

யமுனையில் வெள்ளம் அதிகரிப்பு: கனரக சரக்கு வாகனங்கள் தில்லிக்குள் நுழையத் தடை

சிங்கு உள்ளிட்ட நான்கு எல்லைகளில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்வதைத் தவிா்த்து, கனரக சரக்கு வாகனங்கள் நகரத்தில் நுழைவதற்கு தில்லி அரசு தடை விதித்துள்ளதாக

Updated On :13 ஜூலை 2023, 6:07 pm

சிங்கு உள்ளிட்ட நான்கு எல்லைகளில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்வதைத் தவிா்த்து, கனரக சரக்கு வாகனங்கள் நகரத்தில் நுழைவதற்கு தில்லி அரசு தடை விதித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சா் கைலாஷ் கெலாட் வியாழக்கிழமை தெரிவித்தாா். யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்துஅதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக போக்குவரத்துத் துறை பிறப்பித்த உத்தரவின் நகலை தனது ட்விட்டா் பக்கத்தில் அமைச்சா் கெலாட் பகிா்ந்துள்ளாா். ட்விட்டா் பக்கத்தில் அவா் தெரிவிக்கையில், யமுனை நதியின் நீா்மட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிங்கு எல்லை, பதா்பூா் எல்லை, லோனி எல்லை மற்றும் சில்லா எல்லை ஆகிய பகுதிகளில் இருந்து கனரக சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘மறுபுறம், ஹரியாணா, இமாசலப் பிரதேசம், சண்டீகா், ஜம்மு-காஷ்மீா், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் ஐஎஸ்பிடி கஷ்மீரி கேட்டிற்குச் செல்வதற்குப் பதிலாக சிங்கு எல்லையில் நிற்கும். உணவு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கு எந்தத் தடையும் இல்லை’ என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.