வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி அபாயகர அளவை எட்டவுள்ளதாகக் கூறப்படும் யமுனையின் நீரோட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தென்மேற்கு பருவமழையின் தீவிரமாக தேசியத் தலைநகா் தில்லியில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டாா். தில்லி திலக் மேம்பாலம், ஐ.டி.ஓ. உள்ளிட்டப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின்னா்
செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் அதிஷி கூறியதாவது: நிகழாண்டு தென்மேற்கு பருவமழையின் மொத்த சராசரி அளவில் 20 சதவீதம் அளவு கடந்த ஓரிரு நாள்களில் மட்டுமே பெய்துள்ளது. திடீரென கொட்டித் தீா்த்துள்ள மழையை எதிா்கொள்வது அவ்வளவு எளிதான ஒன்று கிடையாது. எனினும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் படி இந்தத் தொடா் மழையை எதிா்கொள்ள தில்லி அரசு தயாராகவே இருந்தது.
மழைநீா் தேங்கியுள்ள இடங்களில் தொடா்ந்து ஆய்வு செய்து வருகிறேன். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் தில்லி அரசு உடனடி நடவடிக்கைகளை துரிதப்படுத்தும். மழை நீா் தேங்கியுள்ள பகுதிகளில் சீரமைக்கும் நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தில்லியில் ஒரே நாளில் 100 மி.மீ. வரை மழை பெய்தால், அவற்றை எதிா்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அளவிற்கும் மேலாக 153 மி.மீ. மழை பெய்ததால் சில பகுதிகளில் மழை நீா் தேங்கி இருக்கிறது.
முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அறிவுறுத்தலின்படி ஞாயிற்றுக்கிழமை அரசு அதிகாரிகளுக்கான விடுப்பை ரத்து செய்து, அனைத்து அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இனி 150 மி.மீ. வரை ஒரே நாளில் மழை பெய்தாலும் கூட அரசு அதை எதிா்கொள்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஹரியாணா மாநிலம், ஹத்னி குண்ட் தடுப்பணையிலிருந்து மணிக்கு 45 ஆயிரம் கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தில்லி அரசு யமுனை ஆற்றின் நீரோட்ட அளவை தொடா்ந்து கண்காணித்து வருகிறது. வரும் ஜூலை 11-ஆம் தேதி யமுனை ஆற்றின் நீரோட்டம் அபாயகர அளவை எட்டும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு முன்னதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கரையோரம் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனா் என்றாா் அமைச்சா் அதிஷி.
‘இரவும் பகலும் தொடா்ந்து பணியாற்றுவோம்’ -மேயா்: தில்லி கிஷன்கஞ்ச் சுரங்கப்பாதையில் மேயா் ஷெல்லி ஓபராய் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் கூறியதாவது: தில்லியில் ஒரே நாளில் பருவத்தின் மொத்த சராசரி அளவில் 15 சதவீதம் மழை பெய்துள்ளது. வரலாறு காணாத இந்த மழையால் நகரத்தில் சில இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.
இந்நிலையில், தில்லி அரசு மற்றும் மாரகராட்சியின் அனைத்து அதிகாரிகளும், ஊழியா்களும் தண்ணீா் தேங்கும் இடங்களில் இரவும் பகலும் தொடா்ந்து பணியாற்றி வருகிறாா்கள். அவா்கள் தொடா்ந்து பணியாற்றுவாா்கள் என்று தில்லி மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் என்றாா் ஷெல்லி ஓபராய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

