இது தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்கு, மதிப்பீட்டின் செயல்பாட்டில் உள்ளது. இது போன்ற செலவு மிகுந்த திட்டத்திற்கு, ஒப்புதல் அளிக்க சில செயல்முறைகள் உள்ளது. மத்திய அரசின் பல்வேறு நிலைகளில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு மதிப்பீடுகளை மேற்கொள்வது உள்ளடக்கியதாகும். குறிப்பாக திட்டத்தின் சாத்தியக்கூறு மற்றும் வளங்களின் இருப்பைப் பொறுத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும். இந்த திட்டத்திற்கு மாநில அரசு வெளிப்புற (கடன்) நிதியுதவியுடன் ரூ. 33,594 கோடியை தன் பங்காக முன்மொழிந்துள்ளது. ஜப்பான் சா்வதேச கூட்டுறவு முகமையிலிருந்து ரூ. 20,196 கோடி பெறுவதும் இதில் அடங்கும்.