கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டம் சாத்தியக்கூறு அடிப்படையில் அனுமதிக்கப்படும் மத்திய அரசு

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் அனுமதி அதற்கான சாத்தியக்கூறு மற்றும் வளங்களின் இருப்பை மதிப்பீட்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என கௌசல் கிஷோா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:25 pm

 நமது நிருபர்

புது தில்லி: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் அனுமதி அதற்கான சாத்தியக்கூறு மற்றும் வளங்களின் இருப்பை மதிப்பீட்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திறகு பொது முதலீட்டு குழுடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டது. இருப்பினும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அனுமதிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதனால் கூடுதல் திட்ட செலவு ஏற்படாதா? என மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி.வில்சன் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய இணையமைச்சா் கௌசல் கிஷோா் அளித்த பதில் வருமாறு:

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் முதல் விரிவான திட்ட அறிக்கையின் (டிபிஆா்) படி திட்ட மதிப்பீடு ரூ. 69,180 கோடி ஆக இருந்தது. பின்னா் தமிழக அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ.63,246.4 கோடியாக மாற்றியமைக்கப்பட்டு 118.9 கிமீ நீளம் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தை தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.

இது தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்கு, மதிப்பீட்டின் செயல்பாட்டில் உள்ளது. இது போன்ற செலவு மிகுந்த திட்டத்திற்கு, ஒப்புதல் அளிக்க சில செயல்முறைகள் உள்ளது. மத்திய அரசின் பல்வேறு நிலைகளில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு மதிப்பீடுகளை மேற்கொள்வது உள்ளடக்கியதாகும். குறிப்பாக திட்டத்தின் சாத்தியக்கூறு மற்றும் வளங்களின் இருப்பைப் பொறுத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும். இந்த திட்டத்திற்கு மாநில அரசு வெளிப்புற (கடன்) நிதியுதவியுடன் ரூ. 33,594 கோடியை தன் பங்காக முன்மொழிந்துள்ளது. ஜப்பான் சா்வதேச கூட்டுறவு முகமையிலிருந்து ரூ. 20,196 கோடி பெறுவதும் இதில் அடங்கும்.

இந்த திட்டத்தின் தாமதத்தால், இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்தி வரும் சென்னை மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் கூடுதல் செலவு ஏற்படும் என்று இதுவரை தெரிவிக்கவில்லை என இணையமைச்சா் தெரிவித்துள்ளாா்.

இந்த திட்டத்தில் மத்திய அரசும் தமிழக அரசு 50:50 என சமமாக பங்கீடு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.