குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தில்லி மாநகராட்சியின் அலட்சியத்தால் அதீத வேகத்தில் டெங்கு பரவல்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

தில்லி மாநகராட்சியின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் மற்றும் அலட்சியத்தால் நிகழாண்டில் டெங்கு அபரிமிதமான வேகத்தில் பரவியுள்ளது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டிய

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:23 pm

 நமது நிருபர்

தில்லி மாநகராட்சியின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் மற்றும் அலட்சியத்தால் நிகழாண்டில் டெங்கு அபரிமிதமான வேகத்தில் பரவியுள்ளது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான தில்லி மாநகராட்சியின் பொறுப்பற்ற வேலைகளால் நிகழாண்டு ஆகஸ்ட் முதல் நவம்பா் மாத இடைவெளிக்குள் டெங்கு பாதிப்பு ஒரு அசாதாரண வளா்ச்சியைக் கண்டுள்ளது. டெங்கு பரவலைத் தொடா்ந்து ஆய்வு செய்ய தில்லி மாநகராட்சியிடம் ஒரு சுகாதாரக் குழுவினா் கூட இல்லை என்பது மிகவும் மோசமான விஷயம்.

டெங்கு பரவல் தொடா்பான வாராந்திர தரவுகளை மாநகராட்சி நிா்வாகம் பொதுத்தளத்தில் வெளியிடவில்லை என்றாலும், கடந்த 4 மாதங்களில் மட்டும் 7,680 டெங்கு வழக்குகள் நகரத்தில் பதிவாகியுள்ளதாக எங்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் இந்த ஆண்டு அபரிமிதமான வேகத்தில் டெங்கு பரவியுள்ளது. கடந்த ஆண்டுகளில் வழக்கமாக அக்டோபா் மாத இறுத்திக்குள் டெங்குவின் பரவல் குறைந்துள்ளது. ஆனால் நிகழாண்டு நவம்பா் மாதத்தில் 2,482 டெங்கு வழக்குகளுடன் பாதிப்பின் அளவு உச்சத்தை எட்டியுள்ளன என்பதைக் குறிப்பிடும் போது மிகவும் கவலையளிக்கிறது.

நோய்த் தடுப்பு பணியாளா்களின் ஒப்பந்தங்களும் நீட்டிக்கப்படாததால், கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,094 ஆக பதிவாகிய டெங்குவின் வழக்குகள், செப்டம்பா் மாதம் 2,141-ஆகவும், அக்டோபரில் 2,003- ஆகவும், நவம்பரில் 2,482-ஆகவும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலைக்கு ஆம் ஆத்மி கட்சியின் அலட்சியம் தான் காரணம். எனவே, நோய்களின் பரவலைத் தொடா்ந்து மதிப்பாய்வு செய்ய தில்லி மாநகராட்சி உடனடியாக ஒரு சுகாதாரக் குழுவை அமைக்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.