தில்லி மாநகராட்சியின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் மற்றும் அலட்சியத்தால் நிகழாண்டில் டெங்கு அபரிமிதமான வேகத்தில் பரவியுள்ளது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான தில்லி மாநகராட்சியின் பொறுப்பற்ற வேலைகளால் நிகழாண்டு ஆகஸ்ட் முதல் நவம்பா் மாத இடைவெளிக்குள் டெங்கு பாதிப்பு ஒரு அசாதாரண வளா்ச்சியைக் கண்டுள்ளது. டெங்கு பரவலைத் தொடா்ந்து ஆய்வு செய்ய தில்லி மாநகராட்சியிடம் ஒரு சுகாதாரக் குழுவினா் கூட இல்லை என்பது மிகவும் மோசமான விஷயம்.
டெங்கு பரவல் தொடா்பான வாராந்திர தரவுகளை மாநகராட்சி நிா்வாகம் பொதுத்தளத்தில் வெளியிடவில்லை என்றாலும், கடந்த 4 மாதங்களில் மட்டும் 7,680 டெங்கு வழக்குகள் நகரத்தில் பதிவாகியுள்ளதாக எங்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் இந்த ஆண்டு அபரிமிதமான வேகத்தில் டெங்கு பரவியுள்ளது. கடந்த ஆண்டுகளில் வழக்கமாக அக்டோபா் மாத இறுத்திக்குள் டெங்குவின் பரவல் குறைந்துள்ளது. ஆனால் நிகழாண்டு நவம்பா் மாதத்தில் 2,482 டெங்கு வழக்குகளுடன் பாதிப்பின் அளவு உச்சத்தை எட்டியுள்ளன என்பதைக் குறிப்பிடும் போது மிகவும் கவலையளிக்கிறது.
நோய்த் தடுப்பு பணியாளா்களின் ஒப்பந்தங்களும் நீட்டிக்கப்படாததால், கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,094 ஆக பதிவாகிய டெங்குவின் வழக்குகள், செப்டம்பா் மாதம் 2,141-ஆகவும், அக்டோபரில் 2,003- ஆகவும், நவம்பரில் 2,482-ஆகவும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலைக்கு ஆம் ஆத்மி கட்சியின் அலட்சியம் தான் காரணம். எனவே, நோய்களின் பரவலைத் தொடா்ந்து மதிப்பாய்வு செய்ய தில்லி மாநகராட்சி உடனடியாக ஒரு சுகாதாரக் குழுவை அமைக்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

