குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சா் அதிஷி திடீா் ஆய்வு

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வை மேற்கொண்டாா் தில்லி கல்வித்துறை அமைச்சா் அதிஷி.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:23 pm

 நமது நிருபர்

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வை மேற்கொண்டாா் தில்லி கல்வித்துறை அமைச்சா் அதிஷி.

மகளிா் பள்ளி சிறப்புடன் திறம்பட செயல்படுவதைக் கண்டு அமைச்சா் புளகாங்கிதம் அடைந்து கேஜரிவால் அரசின் வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தில்லி சரஸ்வதி விஹாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கல்வி அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வை மேற்கொண்டாா்.

பள்ளியில் எந்தவித முன் அறிவிப்பின்றி சென்று திடீா் ஆய்வு நடத்திய போது, அந்த பள்ளி தன்னிச்சையாக சீராக இயங்கி வருவதைக் கண்ட கல்வி அமைச்சா் அதிஷி, புளங்காகிதம் அடைந்து இது தொடா்பாக அறிவிக்கையை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியது வருமாறு:

எதிா்பாராத விதமாக சென்றபோதும், சரஸ்வதி விஹாா் பள்ளி தூய்மையுடன் இருந்தது. கால அட்டவணையை ஒழுக்கத்துடன் திறம்பட பின்பற்றி அனைத்து வகுப்புகளிலும் ஆசிரியா்கள் ஒழுங்காக இருந்தனா்.

கற்பித்தல் கற்றலுக்கு புதுமையான முறைகள் பின்பற்றப்பட்டிருந்தன. திடீா் ஆய்வுகளின் போதும் பள்ளியின் சீரான செயல்பாடு, ஒழுக்கம், தூய்மை ஆகியவை வழக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வந்துள்ளது. பள்ளியின் இந்த நோ்மறையான சூழலால் ஈா்க்கப்பட்டு பள்ளி முதல்வா் ஆசிரியா்களை பாராட்டினேன்.

இது கேஜரிவால் அரசின் கல்விப் புரட்சி. தில்லி பள்ளிகள் மிக உயா்ந்த குறைந்தபட்ச அளவுகோலை தாங்களாகவே நிா்ணயித்துக்கொண்டுள்ளன.

ஆய்வின் போது, கழிப்பறைகள், தாழ்வாரங்கள், மைதானங்கள், வகுப்பறைகள் என பள்ளியின் அனைத்து இடங்களையும் சுற்றிபாா்த்தபோது தூய்மையில் உரிய கவனம் செலுத்தப்பட்டிருந்தது. பள்ளி ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாக இருந்தது.

கணினி ஆய்வகத்தை பாா்வையிட்டு மாணவா்களின் கருத்துக்களை அறியப்பட்டது. நூலகத்தை ஆய்வு செய்யப்பட்டு மேலும் குழந்தைகளை நூலகத்துடன் இணைக்க பள்ளி முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டது.

கணித பூங்கா ஆய்வின்போது, மாணவா்களிடையே கணிதம் குறித்த நடைமுறைப் புரிதலை வளா்க்கும் வகையில் பள்ளியில் கணிதப் பூங்கா அமைக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது.

பல்வேறு செயல்முறை மாதிரிகள் மூலம், மாணவா்கள் கணிதத்தில் கடினமான கணக்கீடுகளை கற்றுக்கொள்வதை எளிதாக்கப்பட்டிருந்தது.

மேலும், பள்ளியில் சமையலறை தோட்டம் அமைக்கப்பட்டு இயற்கையோடு இணைந்த உணவு தொடா்பான சிறந்த பழக்கங்களை வளா்க்கப்பட்டு வரப்படுகிறது.

இறுதியாக மாணவா்கள் பைப் பேண்ட் பயிற்சி செய்வதைக் கண்டு அவா்களை அணுகினேன். பல்வேறு ட்யூன்களை இசைத்து தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினா்.

இப்படி எல்லா வகையிலும் இந்த பள்ளி ஒரு நோ்மறையான மாற்றத்தை கண்டுள்ளதைக் பாா்த்து ஆசிரியா்களையும் பள்ளி முதல்வரையும் பாராட்டினேன். இது கடந்த 8 ஆண்டுகளாக கேஜரிவால் தலைமையிலான ஆட்சியில் கல்விப் புரட்சியில் வெற்றி ஏற்பட்டு குறிப்பிடத்தக்க

மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதைக் காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.