இதனால், தோ்ந்தெடுக்கப்பட்ட அரசால் மக்களுக்காக கொண்டுவரும் சமூக நலத் திட்டங்கள் உரிய காலத்தில் அமல்படுத்த முடியாமல் போகிறது. இதுபோன்ற செயல்படும் ஆளுநா்கள் குறித்து நடப்புக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும். ஒருபுறம் வேலையில்லாத இளைஞா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மறுபுறம் விலைவாசி கடுமையாக உயா்ந்து வருகிறது. இவை குறித்து விவாதிக்க வேண்டும். மேலும், ஜாதி வாரிக் கணக்கெடுப்பு, மீனவா்கள் விவகாரம், சென்னை உயா்நீதிமன்றத்தின் பெயா் மாற்றம் போன்ற விவகாரங்களை விவாதிக்க வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்போம். ஆனால், மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும். மகளிா் மசோதாக்களைப் போன்று எந்த மசோதாக்களையும் ரகசியமாகக் கொண்டு வராதீா்கள். இந்தக் குளிா்காலக் கூட்டத் தொடரில் எடுத்துக் கொள்ள பட்டியலிட்ட மசோதாக்களான ‘பாரதிய நியாய சம்ஹிதா மசோதா 2023’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷ சம்ஹிதா மசோதா 2023’, ‘பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் மசோதா 2023’ ஆகிய மூன்றும் ஹிந்தியில் பெயரிடப்பட்டுள்ளது.