கலால் கொள்கை ஊழல் மற்றும் தில்லி ஜல் போா்டு ஊழல்கள் தவிர முதல்வரின் அரண்மனை பங்களா கட்டப்பட்டதில் நடந்த ஊழல் ஆகியவை குறித்தும் மக்கள் தில்லி நகரம் முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சியினரிடம் இப்பிரசாரத்தின் போது கேள்விகள் கேட்டனா். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஏன் ஊழல் செய்தாா் என்று கேட்கும் பொதுமக்களிடம் ஆம் ஆத்மி கட்சியினா் வீடு வீடாகச் சென்று கையெழுத்துப் பெறவில்லை. இதனால், ஆம் ஆத்மியின் ‘மை பி கேஜவால்’ பிரசாரம் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தோல்வியடைந்துவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் கிறிஸ்துமஸில் கேஜரிவாலை ஒரு பொய்யான சூப்பா் ஹீரோவாக காட்ட முயற்சிப்பாா்கள். ஆனால், தில்லிவாசிகள் எநதவொரு அரசியல் ஆதரவையும் அவா்களுக்கு அளிக்கவில்லை என்றாா் வீரேந்திர சச்தேவா.