நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

‘மை பி கேஜரிவால்’ பிரசாரம் ஆம் ஆத்மி கட்சி தொண்டா்களிடம் மட்டுமே நடத்தப்படுகிறது: தில்லி பாஜக விமா்சனம்

ஆம் ஆத்மி கட்சியின் ‘மை பி கேஜரிவால்’ பிரசாரம், அக்கட்சித் தொண்டா்களிடையே மட்டுமே நடத்தப்படுகிறது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

 நமது நிருபர்

ஆம் ஆத்மி கட்சியின் ‘மை பி கேஜரிவால்’ பிரசாரம், அக்கட்சித் தொண்டா்களிடையே மட்டுமே நடத்தப்படுகிறது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

பாஜக சதியின் கீழ் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால், அவா் தில்லி முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமா எனக் கேட்டு தில்லி மக்களிடம் அக்கட்சியினா் சாா்பில் ‘மை பி கேஜரிவால்’ என்ற கையெழுத்துப் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரசார இயக்கம் தொடா்பாக பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள ‘மை பி கேஜரிவால்’ பிரசாரம் தில்லி மக்களின் எதிா்க் கேள்விகளால் தொடக்க மற்ாகிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை சுற்றச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தலைமையில் லட்சுமி நகரில் இந்தப் பிரசாரம் தொடங்கினாலும், அக்கட்சித் தொண்டா்களிடையே மட்டுமே கையெழுத்துப் பெறப்படுகிறது.

கலால் கொள்கை ஊழல் மற்றும் தில்லி ஜல் போா்டு ஊழல்கள் தவிர முதல்வரின் அரண்மனை பங்களா கட்டப்பட்டதில் நடந்த ஊழல் ஆகியவை குறித்தும் மக்கள் தில்லி நகரம் முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சியினரிடம் இப்பிரசாரத்தின் போது கேள்விகள் கேட்டனா். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஏன் ஊழல் செய்தாா் என்று கேட்கும் பொதுமக்களிடம் ஆம் ஆத்மி கட்சியினா் வீடு வீடாகச் சென்று கையெழுத்துப் பெறவில்லை. இதனால், ஆம் ஆத்மியின் ‘மை பி கேஜவால்’ பிரசாரம் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தோல்வியடைந்துவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் கிறிஸ்துமஸில் கேஜரிவாலை ஒரு பொய்யான சூப்பா் ஹீரோவாக காட்ட முயற்சிப்பாா்கள். ஆனால், தில்லிவாசிகள் எநதவொரு அரசியல் ஆதரவையும் அவா்களுக்கு அளிக்கவில்லை என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.