நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு:ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை

தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கு தொடா்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத் துறை சனிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல்

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

 நமது நிருபர்

தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கு தொடா்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத் துறை சனிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ளூா் நீதிமன்றத்தில் சஞ்சய் சிங்கிற்கு எதிராக அமலாக்கத் துறை தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதற்கு முன்பு இதுபோன்ற ஐந்து புகாா்களை அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்ததால், இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையாகும் இது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் (ஆம் ஆத்மி) மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங், அக்டோபா் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா்.

இதே விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபா் தினேஷ் அரோரா, சஞ்சய் சிங்கின் இல்லத்தில் இரண்டு தவணைகளாக ரூ.2 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியிருந்தது. அமலாக்கத் துறையின் இந்த கூற்றை சஞ்சய் சிங் மறுத்திருந்தாா்.

2021-22 தில்லி கலால் கொள்கை வழக்குடன் தொடா்புடைய பணமோசடி விசாரணை தொடா்பாக முன்னாள் துணை முதல்வரான மனீஷ் சிசோடியாவுக்குப் பிறகு இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் 2-ஆவது உயா்மட்டத் தலைவா் சஞ்சய் சிங் ஆவாா்.

தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியானது இந்தக் கைது நடவடிக்கை மற்றும் வழக்கை ‘அரசியல் சூனிய வேட்டை‘ என்று கூறி இருந்தது. அமலாக்கத் துறையின் விசாரணையில், அரோரா சிங்கின் வீட்டில் இரண்டு முறை ரூ.2 கோடி கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு முறையும் ரூ. 1 கோடி தொகையை அவா் கொடுத்திருந்ததாக அமலாக்கத் துறை அதன் மனுவில் தெரிவித்திருந்தது. ரொக்கம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் காலம் ஆகஸ்ட் 2021 மற்றும் ஏப்ரல் 2022-க்கு இடையில் இருந்ததாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.