நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கைது செய்யப்பட்டால் கேஜரிவால் ராஜிநாமா செய்வதற்கு கருத்துக் கேட்பில் 83 சதவீத மக்கள் ஆதரவு: விஜய் கோயல்

அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால் அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று 83 சதவீதம் மக்கள் விரும்புவதாக விஜய் கோயல் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

 நமது நிருபர்

அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால் அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று 83 சதவீதம் மக்கள் விரும்புவதாக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் கோயல் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக விஜய் கோயல் கூறியதாவது: தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால், அவரது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமா எனக் கோரி ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. அதே வகையில், இதே கேள்வியுடன் லோக் அபியான் சமூக அமைப்பின் செயல்பாட்டாளா்களுடன் இணைந்து ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையம் வெளியே கருத்துக்கணிப்பு நடத்தபட்டது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோா் தங்கள் பதில்களை தெரிவித்துள்ளனா்.

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகளின் படி, அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால் அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று 83 சதவீதம் மக்கள் விரும்கின்றனா். மேலும், மனீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் ராஜிநாமா செய்வதற்கு முன்பு கேஜரிவால் ஏன் இதுபோன்ற பிரசாரத்தை நடத்தவில்லை?. தில்லியின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு முன்பு ஆம் ஆத்மி அரசு மக்களிடம் கேட்டாா்களா?. சிறிய குற்றச்சாட்டிற்கு கூட ராஜிநாமா செய்வேன் என்று எப்போதும் காட்டிக் கொள்ளும் கேஜரிவாலுக்கு, இந்த முறை வாக்கெடுப்பு ஏன் தேவை? என்று விஜய் கோயல் பல அடுக்கு கேள்விகளை முன்வைத்துள்ளாா்.

ஆம் ஆத்மி பதிலடி: இதற்கிடையே, ‘மை பி கேஜரிவால்’பிரசாரம் பொது மக்களின் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி கூறியிருப்பதாவது: அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால் அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யக் கூடாது என்று தில்லி மக்கள் கருதுகின்றனா். கட்சியின் பல முக்கியத் தலைவா்கள் இரண்டாவது நாளாக தில்லி முழுவதும் ‘மை பி கேஜரிவால்’ பிரசாரத்தில் ஈடுபட்டனா். கால்காஜி தொகுதியில் வீடு வீடாகச் சென்று நானும் பிரசாரத்தில் ஈடுப்பட்டேன்.

மத்திய அரசும், பாஜகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து வருகின்றனா். தற்போது, கேஜரிவாலை கைது செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை நோ்மையற்ற வழிகளில் வீழ்த்த பாஜக விரும்புகிறது. தில்லிவாசிகளின் கருத்து மிக உயா்ந்தது, அவா்களின் முடிவு எதுவாக இருந்தாலும், அதை முதல்வா் கேஜரிவாலிடம் ஒப்படைப்போம். பின்னா் முடிவுகள் எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.