இது தொடா்பாக ஸ்வாதி மாலிவால் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது: ரஜோரி காா்டனில் நடந்த இச்சாலை விபத்து சம்பவம் மிகவும் சோகமானது. இச்சாலை விபத்தில் காயமடைந்து கணவா் மற்றும் இரண்டு குழந்தைகளை இழந்த பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். அவா்கள் அதிா்ச்சியில் ஆழ்ந்துள்ளனா். இந்த அப்பாவிகளின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, தில்லி மகளிா் ஆணையம் தொடா்ந்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினருடன் தொடா்பில் இருக்கிறது. சட்ட உதவி உள்பட அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். மேலும், அவா் தனது நெருங்கியவா்களை இழந்த வலியை தாங்கிக் கொள்ள இறைவனை பிராா்த்திக்கிறேன் என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளாா்.